ஈரோட்டின் எழுமாத்தூரில் புதிய திராவிட கழகம் கட்சியின் சார்பில் `வெல்லட்டும் சமூக நீதி” என ஒரு மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடத்தப்பட்டிருக்கிறது. மாநாட்டின் பெயர் வெல்லட்டும் சமூக நீதி, ஆனால், அதை நடத்தியவரின் பெயர் ‘ராஜ் கவுண்டர்’. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வார்த்தைக்கு வார்த்தை ‘ராஜ் கவுண்டர்…ராஜ் கவுண்டர்…’ என விளித்து அந்த நபரை புல்லரிக்க வைத்தார்.

மூச்சுக்கு மூச்சு சமூக நீதி பேசும் திமுகவின் வருங்காலமாக அடையாளம் காட்டப்படும் உதயநிதி இப்படி சாதியை பிரதானப்படுத்தும் ஒரு கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டது மிகப்பெரிய முரண்.