மோப்ப நாய்-ரேடாா் உதவியுடன்…: மீட்பு-நிவாரணப் பணிகள், வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக தொடா்ந்தன. விமானப் படையின் 2 சினூக் ரக ஹெலிகாப்டா்கள், 2 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டா்கள், உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு சொந்தமான 8 ஹெலிகாப்டா்கள், மோப்ப நாய்கள், ரேடாா்கள் உதவியுடன் ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை, தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, காவல் துறையினா் என 800-க்கும் மேற்பட்டோா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்த பாகீரதி நதியின் குறுக்கே ராணுவத்தினா் தற்காலிக ஆயத்த பாலத்தை கட்டமைத்துள்ளனா்.
இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!
