இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Dinamani2f2025 01 232f7zy2wqrp2fp 3975305573.jpg
Spread the love

இந்திய அரசின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு எனவும் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்ற தலைப்பில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

இந்தி நம் நாட்­டின் தேசிய மொழி என்­றும் அதனை யாரும் புறக்­க­ணிக்கக் கூடாது என்­றும் பாஜகவின­ரும் அவர்­க­ளின் கொள்கை வழி அமைப்­பி­ன­ரும் தொடர்ந்து சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யின் தலை­வர் ஓம் பிர்லா சமஸ்­கி­ரு­தம்­தான் பார­தத்­தின் மூல­மொழி என்று அவை­யிலேயே குறிப்­பி­டு­கி­றார். இவை இரண்டுமே தவ­றான பரப்­பு­ரை­யா­கும்.

இந்­திய அரசின் அலு­வல் மொழி­தான் இந்தி. அத்­து­டன் ஆங்­கி­ல­மும் இணை அலு­வல் மொழி­யாக இருக்­கி­றது. இந்­தி­தான் தேசிய மொழி என்­பது முற்றி­லும் தவ­றா­னது.

இந்­திய அரசு என்­பதே பல்­வேறு மொழி­வ­ழித் தேசிய இனங்­க­ளைக் கொண்­ட­தா­கும். இதனை இந்­திய விடு­த­லைக்கு முன்பே காந்­தி­ய­டி­கள் நன்கு உணர்ந்­தி­ருந்­தார். அத­னால்­தான் மாகாண காங்­கி­ரஸ் கமிட்­டி­களை அந்­தந்த மாநி­லத் தாய்­மொ­ழி­க­ளின் பெய­ரில் அமைத்­தார். இந்­தியா விடு­த­லை­ அ­டைந்­த­பி­றகு, பிர­த­மர் ஜவ­கர்­லால் நேரு தலை­மை­யில் அமைந்­தி­ருந்த மத்திய அரசு,மாகா­ணங்­களை மொழி­வழி மாநி­லங்­க­ளா­கப் பிரிப்­ப­தற்­காக மாநில புன­ர­மைப்­புக் குழு­வினை அமைத்­தது. அந்­தக் குழு­வி­டம் பேர­றி­ஞர் அண்ணா தலை­மை­யி­லான திமுக தனது கருத்­து­களை அளித்­தது.

அதில், “மொழி­வ­ழிப் பிரி­வி­னையை திமுக பாராட்­டு­கி­றது. மொழி­வழி அமை­யும் ஒவ்­வொரு மாநி­ல­மும் அதன் முழு அதி­கா­ரத்­து­ட­னும் செயல்­பட வேண்­டும். நாடு என்­பது கூட்­ட­ர­சாக செயல்­பட வேண்­டும். சென்னை ராஜ்­ஜி­யம் ஏற்­­கனவே இருந்­த­படி தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் ஆகிய நான்கு மொழி­ வ­ழிப் பிரி­வாக அமைப்­ப­து­தான் உட­ன­டித் தேவை. இத­னைச் செய்­யும்­போது, எந்­த­வொரு மொழிப்­பி­ரி­வும் மற்­றொரு மொழிப் பிரி­வின் நிலப்ப­ரப்பை அபக­ரித்­துக் ­கொள்­ளா­த­வாறு அதி­கா­ரத்­தில் உள்­ளோர் முழுக் கவ­னம் செலுத்த வேண்­டும். ராஜ்­ஜி­யங்­கள் திருத்தி அமைக்­கப்­பட வேண்­டி­யது நிலப்­ப­ரப்­பைப் பொறுத்து மட்­டு­மல்ல, ராஜ்­ஜி­யங்­க­ளுக்கு ஒதுக்­கப்­ப­டும் அதி­கா­ரங்­க­ளைப் பொறுத்­தும் மாறு­தல் வேண்­டும் என்­ப­தைத் திமுக வற்­பு­றுத்­து­கி­றது” என்று கழ­கம் அளித்த கருத்­து­ரு­வில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளில் சிலர் ‘தட்­சி­ணப் பிர­தே­சம்’ என்ற பெய­ரில் தென்­னிந்­திய மாநி­லங்­களை ஒரே அமைப்­பாக்­கிட முயற்சி செய்­த­போது, அத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தது திமுக. தென்­னிந்­தி­யா­விற்­குட்­பட்ட நிலப்­ப­ரப்பை மொழி­வழி மாநி­லங்­­களா­கத்­தான் பிரிக்­க­வேண்­டும் என்­ப­தில் திமுக உறு­தி­யாக இருந்­தது.

பண்­டி­தர் நேரு தலை­மை­யி­லான அரசு தென்­னிந்­தி­யாவை மட்­டு­மல்ல, வட­இந்­தி­யப் பகு­தி­க­ளி­லும் மொழி­வழி மாநி­லங்­களை உரு­வாக்­கி­யது. இந்­தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல. அது, பல்­வேறு மொழி­வ­ழித் தேசிய இனங்­க­ளைக் கொண்ட இந்தியா என்­பதை நமது அர­சி­யல் அமைப்­புச் சட்டத்தை உரு­வாக்­கிய அம்­பேத்­கர் உள்­ளிட்ட அறி­ஞர்­க­ளும், ஆட்­சி­யி­லி­ருந்த பண்­டி­தர் நேரு போன்றோர்­க­ளும் உணர்ந்து செயல்­பட்­ட­னர்.

மொழி­யின் அடிப்­ப­டை­யில் பிரிக்­கப்­பட்ட மாநி­லங்­க­ளில் அந்­தந்த மாநி­லங்­க­ளின் தாய்­மொழி ஆட்சி மொழி­யாக உள்­ளது. அவை­யும் இந்த தேசத்­தின் மொழி­கள்­தான். அவற்­றை­யும் தேசிய மொழி­கள் என்ற அடிப்­ப­டை­யில் இந்­திய ஒன்­றி­யத்­தின் ஆட்சி மொழி­க­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளா­க­ ஆக்­கிட வேண்­டும் என்­பதை திமுக நெடுங்­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கி­றது.

1965 ஆம் ஆண்டு நாடா­ளு­­மன்றத்தின் மாநி­லங்­க­ள­வை­யில் உரை­யாற்­றிய பேர­றி­ஞர் அண்ணா, “இந்­தி­யா­வில் 100க்கு 40 பேர் இந்தி பேசு­வ­தா­கக்­கூறி, அத­னால் அதைத்­தான் ஆட்­சி­ மொழியாக்க வேண்­டும் என்­கி­றார்­கள். 40 சத­வி­கி­தம் பேர் என்பதை வாதத்­திற்­காக ஏற்­றுக்­கொண்­டா­லும், இந்தி ஒரு பகுதியில் உள்ள மக்­க­ளால் பேசப்­ப­டு­கி­ற­தே­யன்றி, இந்­தியா முழுவதும் பரவாலகப் பேசப்­ப­ட­வில்லை. ஒரு பகு­தி­யில் பெரும்பான்மையினரால் பேசப்­ப­டு­வது, நாடு முழு­வ­தும் ஆட்சி மொழி­யா­வ­தற்­கா­னத் தகு­தி­யைப் பெற்­று­வி­டாது. மொழிப்பிரச்னையில் திமுக ­கொள்கை என்­ன­வென்­றால், இந்தியாவில் முக்­கிய மொழி­க­ளாக உள்ள 14 மொழி­க­ளும் தேசிய மொழி­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு, ஆட்சி மொ­ழி­க­ளா­கும் தகுதி தரப்­ப­ட­வேண்­டும்” என்று வாதா­டி­னார்.

திமுகவின் நோக்­கம் இந்­தியை எதிர்ப்­ப­தல்ல, தமிழ் உள்­ளிட்ட இந்­திய மொழி­க­ளுக்கு சம­மான அங்­கீ­கா­ரம் வேண்­டும். இந்­திய அரசின் ஆட்­சி­ மொ­ழிக­ளா­க, அ­லு­வல் மொழி­க­ளாக அனைத்து மொழி­க­ளுக்­கும் இடம­ளிக்க வேண்­டும் என்று குறிப்­பிட்­டார்­கள்.

மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக அண்ணா இருந்­த­ கா­லத்­தில் 8 ஆவது அட்­ட­வ­ணை­யில் 14 மொழி­கள் இருந்­தன. தற்­போது அது 22 ஆக உயர்ந்­துள்ளது. மேலும் சில மொழி­க­ளும் இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெ­றக் காத்­தி­ருக்­கின்­றன. இந்­திய அர­சி­ய­மைப்­புச் சட்­டத்­தின் எட்­டா­வது அட்­ட­வ­ணை­யில் இடம்­பெற்­றுள்ள தமிழ் உள்­ளிட்ட இந்­திய மொழி­கள் அனைத்­தும் இந்­தி­யா­வின் தேசிய மொழிகள்தான்.

இந்தி மட்­டுமே தேசிய மொழி என்­பது ஆதிக்­கத்­தின் வெளிப்­பாடு. சமஸ்­கி­ரு­தமே இந்­தி­யா­வின் மூல மொழி என்­பது நம்மை அடிமையாக்கும் முயற்சி. மூல­மொழி என்­றால் அதி­லி­ருந்­து­தான் மற்ற மொழி­கள் தோன்ற முடி­யும். அதா­வது, இந்­தி­யா­வில் உள்ள அத்­தனை மொழி­க­ளும் சமஸ்­கி­ரு­தத்­தி­லி­ருந்து உரு­வா­னது என நிறு­வப்பார்க்­கி­றார்­கள். தமிழ் உள்­ளிட்ட திரா­விட மொழி­கள் தனித்­தன்மை கொண்­டவை என்­பதை ஏறத்­தாழ 175 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்­வுப்­பூர்­வ­மாக உல­கத்­திற்கு அறியச் செய்­த­வர் கால்­டு­வெல். இதனை 2010 ஆம் ஆண்டு கோவை­யில் நடை­பெற்றஉல­கத் தமிழ் செம்­மொழி மாநாட்­டின்­போது வெளிட்ட அறிக்­கை­யில் முத்­தமி­ழ­றி­ஞர் கலை­ஞர் குறிப்­பிட்­டுக் காட்­டி­யுள்­ளார்.

“தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென முதல் குரல் கொடுத்த தமி­ழர் பரி­தி­மாற்­க­லை­ஞர் என்­றால், தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென்று முத­லில் சொன்ன வெளிநாட்­ட­வர் அறி­ஞர் ராபர்ட் கால்­டு­வெல் ஆவார். பரி­தி­மாற் கலை­ஞர் தமிழ்­மொழி செம்­மொ­ழி­யென 1887 ஆம் ஆண்டு குரல் கொடுத்­த­தற்கு 30 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, 1856 ஆம் ஆண்டு கால்­டு­வெல் தாம் எழு­திய ‘திரா­விட மொழி­க­ளின் ஒப்­பி­லக்­க­ணம்’ என்ற ஒப்­பு­வமை காண்­பித்­திட இயலாத, உயர்­பெ­ரும் நூலில், ‘திரா­விட மொழி­கள் அனைத்­தி­லும் உயர்தனிச் செம்­மொ­ழி­யாய் நிலை­பெற்று விளங்­கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்­றி­ருக்­கும் சமஸ்­கி­ரு­தச் சொற்­களை அறவே ஒழித்­து­விட்டு உயிர் வாழ்­வ­தோடு,அவற்­றின் துணையை ஒரு சிறி­தும் வேண்­டா­மல் வளம் பெற்று வளர்­வ­தும் இய­லும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *