தெற்காசியாவின் மிக முக்கியமான வரலாற்றுத் தருணங்களை உலகிற்குத் தனது அறிக்கைகள் மூலம் மார்க் டல்லி கொண்டு சேர்த்தார். இந்தியா-பாகிஸ்தான் போர்கள், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுல்பிகர் அலி பூட்டோவின் தூக்குத்தண்டனை, 1984 போபால் விஷவாயு விபத்து, ஆபரேஷன் புளூ ஸ்டார், ராஜீவ் காந்தி படுகொலை, பாபர் மசூதி இடிப்பு எனப் பல முக்கிய நிகழ்வுகளை அவர் முன்னின்று பதிவு செய்தார்.
குறிப்பாக1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, பிபிசி மீது கோபத்தில் இருந்த ஒரு கும்பலால் மார்க் டல்லியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஒரு அறையில் பல மணிநேரம் அடைத்து வைக்கப்பட்ட அவரை, உள்ளூர் அதிகாரி ஒருவரும், பூசாரி ஒருவரும் இணைந்து அவரை மீட்டு, உயிரைக் காப்பாற்றினர்.
மேலும், வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரரான மார்க் டல்லி, இதுவரை ஒன்பது புத்தகங்களை எழுதியுள்ளார். 1985-ல் சதீஷ் ஜேக்கப்புடன் இணைந்து எழுதிய Amritsar: Mrs Gandhi’s Last Battle அவரது முதல் புத்தகமாகும்.
2017-ல் வட இந்தியாவின் கிராமப்புறக் கதைகளை உள்ளடக்கிய Upcountry Tales என்ற தனது கடைசிப் புத்தகத்தை வெளியிட்டார். அவரது சேவையைப் பாராட்டி 1992-ல் பத்மஸ்ரீ, 2002-ல் Knighted மற்றும் 2005-ல் பத்ம பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.