இந்தியாவின் மொத்த நாட்டு உள்நாட்டு உற்பத்தி அதிகரித்திருப்பதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் (2024 -25) இரண்டாவது காலாண்டில் 5.6 சதவிகிதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி, மூன்றாவது காலாண்டில் 6.2 சதவிகிதமாக அதிகரித்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் (2023 -24) இதே காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நிகழ் நிதியாண்டில் 6.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.