தோல்விக்கு காரணம் என்ன?
துபை ஆடுகளங்களின் தன்மையை அறிந்து இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தியது நியூசிலாந்து அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மாட் ஹென்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அந்த அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட பயன்படுத்தியதாக நினைக்கிறேன். துபை ஆடுகளங்களின் தன்மையை நன்கு அறிந்திருந்தது இந்திய அணிக்கு சாதகமாக இருந்தது. ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்கள் மிகவும் அற்புதமாக விளையாடினார்கள். அதுவே எங்களுக்கு சவாலானதாக அமைந்தது.