இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்திற்கு வரவேற்பு இருந்தாலும், சில எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
இந்த எதிர்ப்புகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பதிவு செய்துள்ளனர்.
அந்த எதிர்ப்புகளின் தொகுப்பு இதோ…
> இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன… வரிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால், அமெரிக்காவின் விவசாயப் பொருள்கள் மற்றும் பால் பொருள்களின் இறக்குமதி இங்கே அதிகரிக்கும்.

இது 72 கோடி விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும்.
இந்திய விவசாயப் பொருள்களின் மீது அமெரிக்கா பெருமளவு எந்தச் சலுகையும் வழங்கவில்லை.
இதனால், அமெரிக்கப் பொருள்களுடன் இந்திய உற்பத்திகளால் போட்டியிட முடியாமல் போகலாம்.
> “ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கமாட்டோம்’ என்கிற உத்தரவாதத்தில் தான் இந்த ஒப்பந்தம் முடிவாகி உள்ளது.
இது சரண்டர் இல்லையா… இது இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கிறது அல்லவா? அமெரிக்காவின் கட்டளையைப் பின்பற்றுகிறதா இந்தியா?