“இந்தியா அரசின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா அறிவிக்கிறது” – காங்கிரஸ் விமர்சனம்| “The US is making announcements regarding the Indian government’s actions” – Congress criticism.

Spread the love

அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதன்படி, இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அதற்குப் பதிலாக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் குறைத்து, அமெரிக்கா, வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்திருக்கிறது.

மேலும், அமெரிக்க இறக்குமதிப் பொருளுக்குப் பூஜ்ய வரி எனவும், அமெரிக்காவிடம் $500 பில்லியன் (சுமார் ₹42 லட்சம் கோடி) மதிப்பிலான கொள்முதல் செய்யப்படும் எனவும் அறிவித்திருக்கும் பிரதமர் மோடி, உலகிற்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் வேண்டும் எனவும் தெரித்திருக்கிறார். தற்போது உலக அரசியலில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.

மோடி - ட்ரம்ப்

மோடி – ட்ரம்ப்
White House

இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பக்கத்தில், “வாஷிங்டன் டி.சி-யிலிருந்துதான் “ஆபரேஷன் சிந்தூர்’ நிறுத்தப்படுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த சமீபத்திய தகவல்களையும் வாஷிங்டனில் இருந்தே அவர் அறிவிக்கிறார்.

முழு விவரங்களும் இன்னும் வராத நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தையும் வாஷிங்டனில் இருந்தே அவரே அறிவித்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *