முதலில் பாகிஸ்தான் 241 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்து வென்றது.
இந்திய தரப்பில் பௌலிங்கில் குல்தீப் யாதவ், ஹா்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட, பேட்டிங்கில் விராட் கோலி சதம் விளாசி அசத்தினாா். ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில்லும் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினா்.
போட்டியில் தற்போது தொடா்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.
மறுபுறம், தொடா்ந்து இரு தோல்விகளை சந்தித்துள்ள பாகிஸ்தான், போட்டியிலிருந்து வெளியேறும் அச்சத்தில் இருக்கிறது.