இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி | Indian Communist leader Nallakannu admitted to govt hospital again

1380038
Spread the love

சென்னை: இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்ணு மீண்​டும் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு. 100 வயதாகும் நிலை​யில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி வீட்​டில் தவறி கீழே விழுந்​த​தில் அவரது தலை​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை நந்​தனத்​தில் உள்ள வெங்​கடேஸ்​வரா மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார். அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்து வந்த நிலை​யில், அவருக்கு இருந்த நுரை​யீரல் பிரச்​சினை​யால் சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதை தொடர்ந்​து, ஆகஸ்ட் 24-ம் தேதி இரவு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யின் தீவிர சிகிச்​சைப் பிரி​வில் சேர்க்​கப்​பட்​டார். செயற்கை சுவாசம் உதவி​யுடன் அவருக்கு மருத்​து​வர்​கள் சிகிச்சை அளித்​தனர். உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​ட​தால், நல்​ல​கண்ணு கடந்த 10-ம் தேதி வீடு திரும்​பி​னார்.

இந்​நிலை​யில், அவர் நேற்று மீண்​டும் ராஜீவ் காந்தி மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். இதுகுறித்து மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமனிடம் கேட்​ட​போது, “நல்​ல​கண்​ணுவுக்கு உணவு கொடுப்​ப​தற்​காக, அவரது வயிற்​றுப் பகு​தி​யில் ஒரு குழாய் பொருத்​தப்​பட்​டது. அதில் அடைப்பு ஏற்​பட்​ட​தால், மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு வேறு எந்த பிரச்​சினை​யும் இல்​லை. நலமுடன் உள்​ளார். ஓரிரு நாளில் வீடு திரும்​பு​வார்” என்​றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *