தினேஷ் கார்த்திக் கூறியதென்ன?
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட்டின் தரத்தினை ஐபிஎல் தொடர் உயர்த்தியுள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் அனைத்து வீரர்களுக்குள் இருக்கும் வெற்றி பெறும் மனநிலையை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஐபிஎல் தொடருக்கு கிடைக்கும் பணம் மற்றும் பொருளாதார அம்சங்கள் பலவும் நாட்டில் கிரிக்கெட்டுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடையும்போது, விளையாட்டின் தரமும் அதிகரிக்கிறது.