வரலாற்றில் முதல்முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 92 டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருகிறது.
இதற்கான காரணம் நாம் அனைவரும் அறிந்ததே – ஒன்று, உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மை. இன்னொன்று, வளைகுடா நாடுகளில் பரவியுள்ள பதற்றத்தால் கச்சா எண்ணெய் மேலும் மேலும் எகிறும் என்கிற அச்சம்.
இந்த இரண்டினால் பயப்படும் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வேகமாக விற்று வருகின்றனர். இதனால், பங்குச்சந்தையும் சரி… இந்திய ரூபாயின் மதிப்பும் சரி… வேகமாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இன்னொரு பக்கம், அமெரிக்காவின் டாலர் வலுவடைந்து வருகிறது. இதனால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவில் இருந்து மாற்றி வருகின்றனர்.

ஏன் கச்சா எண்ணெய் விலை இந்தியாவிற்கு மைனஸ்?
உலக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்.
இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்வது நிச்சயம் இந்தியாவை சற்று அசைத்துப் பார்க்கும் தான்.
ஹார்மோஸ் ஜலசந்தி தற்போது மூடப்பட்டிருப்பதால், இந்தியா ரஷ்யா போன்ற நாடுகளை கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தேட வேண்டும்.
ஆனால், இந்தியாவிடம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.