“இனி மௌனமாக இருக்க முடியாது!”- ராஷ்மிகா மந்தனா கண்டனம்| Rashmika Mandanna slams harassment after old audio clip goes viral

Spread the love

ராஷ்மிகா மந்தனா – விஜய் தேவரகொண்டா இருவருக்கும் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

ராஷ்மிகா திருமணம் முடிந்ததில் இருந்தே அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரபட்டு வந்தன.

அந்தவகையில் சமீபத்தில் ரஷ்மிகா மந்தனாவின் தாயார் சுமன் மந்தனா பேசியதாகக் கூறப்படும் ஒரு பழைய ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம்

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம்

அந்த ஆடியோவில், ரஷ்மிகா மற்றும் நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோரின் முறிந்த நிச்சயதார்த்தம் குறித்தும், ரக்ஷித் குடும்பத்தினர் ரஷ்மிகாவை சினிமாவில் இருந்து விலகச் சொன்னது குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து பரப்பப்படும் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஷ்மிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் நீண்ட கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்புவது, டார்கெட் செய்து பழிவாங்குவது போன்ற செயல்களை செய்யத் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *