பிரச்சாரம் செய்யலாம்னு இருக்கேன். எந்தெந்த தொகுதிகளுக்குப் போகலாம்னு இனிமேதான் முடிவு செய்யணும். எல்லாத் தொகுதிகளுக்கும் போக முடியாட்டியும் முக்கியமான இடங்களில் பிரச்சாரம் செய்வேன். ஆனா மதிமுக உறுப்பினர்கள் போட்டியிடுகிற தொகுதிகளுக்குப் போகிற ஐடியா இல்லை’’ என்றவரிடம்,

“தி.வெ.க ஆதரவு தந்தது தொடர்பாக மதிமுக தரப்பிலிருந்து யாராவது தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்களா?” என்றதும், மனிதர் உஷ்ணமாகி விட்டார்..
“ஒரு பண்போட அப்படி யாராவது எங்களை தொடர்பு கொண்டு பேசி, அது துரை காதுக்கு போயிடுச்சுன்னா அடுத்த அந்த நபர் அந்தக் கட்சியில இருக்க முடியுமா என்ன? நெற்றிக் கண்ணைத் திறந்து எரிச்சிடுவார் அவங்களை. இன்னைக்கு கட்சி நிலைமையைப் பாருங்க, தனிச்சின்னத்துல போட்டி போடுறோம்னு ஒரு இடத்தை வாங்கிட்டு கடைசியில அதுலயும் உதயசூரியன்லயே போட்டியிடுறோம்னு சொல்லியிருக்காங்க.
கட்சியை கெடுத்து நாசம் பண்ணிட்டார் வைகோவின் மகன். என் மகன் தான் அடுத்த தலைவர், நீ கொஞ்சம் விலகிப் போயிடுனு எங்கிட்ட நேரடியாக் கூப்பிட்டுச் சொல்லியிருந்தாக் கூடா பேசாமப் போயிருப்பேன். ஆனா துரோகி பட்டம் தந்ததாலேயே இன்னைக்கு திவெக-கிற ஒரு கட்சி உதிக்க வேண்டிய அவசியம் உண்டாச்சு. அப்படிப்பட்ட நபர்கள்கிட்ட இருந்து ஒரு நன்றி வரும்னா நான் எதிர்பார்ப்பேன். எங்க ஆதரவை அவங்க ஒரு பொருட்டா எடுத்துக்கிட்டாலும் எடுத்துக்காம போனாலும் எங்களுக்கு அதுபத்தி கவலை இல்லை. நாங்க ஆதரவு தெரிவிக்கிறது திமுக மீண்டும் ஆட்சிக்கு வரணும்னு மட்டுமே’’ என்கிறார் மல்லை சத்யா.