“இன்று எழுதுபவர்கள்கூட சாட் ஜிபிடியைப் பயன்படுத்தித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்!”- அகரமுதல்வன் |”Even today’s writers are writing using Chat GPT!” – Agaramuthulan

Spread the love

அதன் பிறகு தமிழக அரசின் விருதுகளும் அவருக்குக் கிடைத்தன. அவரைப் போல, பல்வேறு தத்துவார்த்த புத்தகங்களையும் தமிழில் மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார்.

இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் பலருக்கு இவர்தான் முன்னோடி. தமிழ் சூழலில் எப்போதுமே எழுத்தாளர்களை முன்னோடிகளாகக் கருதிக் கொண்டாடப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

அவர்களைக் கொண்டாடவும் முடியும் என்பதன் செயல்வடிவம்தான் இந்த நிகழ்வு!” என்றவர், “10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் ராம்தான் எனக்கு ஆர்.சிவக்குமாரை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத்தைவிடவும் சிறப்பாக ஆர். சிவக்குமார் மொழிபெயர்த்திருந்த ‘சோஃபியின் உலகம்’ புத்தகத்தின் முதல் பகுதியை எனக்கு இயக்குநர் ராம் வாசித்துக் காண்பித்தார்.

அகரமுதல்வன்

அகரமுதல்வன்

அதன் பிறகு, அவருடைய புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாசித்தேன். வருடந்தோறும் வெளிவரும் அவருடைய நூல்களையும் தவறாமல் படித்து வந்திருக்கிறேன். இன்றைய சூழலில், வேற்று மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டாலே அது சிறப்பான புத்தகம் எனக் கருதப்படுகிறது.

காஃப்காவின் ‘உருமாற்றம்’ என்ற நூலை ஆர்.சிவக்குமார் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நூலை பலரும் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அதில், ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு தனித்துவமானது. இன்று மொழிபெயர்ப்பு என்பது சாட் ஜிபிடி வரைக்கும் வந்துவிட்டது.

இன்று எழுதுபவர்கள்கூட சாட் ஜிபிடியைப் பயன்படுத்தித்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் இன்று அனைத்து பதிப்பகங்களிலும் 100 மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், மொழிபெயர்ப்பிற்கு சிறந்த மரபொன்று இருக்கிறது. தமிழில் மொழிபெயர்ப்பு என்பதும் மிகவும் அவசியமானது.” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *