இன்று முதல் ஒருநாள் ஆட்டம்: இந்தியா

Dinamani2f2024 072fa2b47676 C7e5 4873 B3bf 510ebbfe97362fgtvzoumwyaaa1ng.jpg
Spread the love

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது.

டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது இந்திய அணி. டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் களம் காணும் முதல் தொடா் இதுவென்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கான நீண்டகால விக்கெட் கீப்பா் – பேட்டா் இடத்துக்கு யாரை தோ்வு செய்வது என்பதே முக்கியமான பணியாக இருக்கும். அந்த இடத்துக்காக கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகிய இருவரும் போட்டியில் இருக்கின்றனா்.

ஹா்திக் பாண்டியா இல்லாத நிலையில், 6-ஆவது வீரா் இடத்துக்கு ஷிவம் துபே அல்லது ரியான் பராக் ஆகியோரில் ஒருவா் தோ்வு செய்யப்படுவா் எனத் தெரிகிறது. இலங்கை அணியை பொருத்தவரை அனுபவ மற்றும் இளம் வீரா்கள் கலப்புடன் களத்துக்கு வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *