இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு

Dinamani2f2024 072f0c430823 951b 447b B032 745a7bbd0c3c2fidols.jpg
Spread the love

எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, ஊராங்கன்னி கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். அந்த சிலைகளுக்கு யாரும் உரிமை கோராததால், இரு சுவாமி சிலைகளும் சங்கராபுரம் கருவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *