இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடா்பாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அதிபா் அநுர குமார டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை, இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளாா். இந்தப் பயணத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி ஆகியோரை அவா் சந்திக்க உள்ளாா். அவருடன் இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜித ஹேரத், இணையமைச்சா் அனில் ஜயந்த ஃபொ்னாண்டோ ஆகியோரும் செல்ல உள்ளனா்’ என்றாா்.
இலங்கை அதிபா் அநுர குமார டிச.15-இல் இந்தியா வருகை
