தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மதுரையில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் நாள்களில் மருந்து மாத்திரைகளுடனும் சென்றுள்ளார். மேலும் தினமும் தூக்க மாத்திரை உட்கொண்டால்தான் தூங்க கூடிய நிலையிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 29-ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க விசைப்படகில் சென்றுள்ளார் பிரபு.
அன்று இரவு இவர்களது படகு பாரம்பர்ய பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் பிரபு உள்ளிட்ட மீனவர்களைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.
சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த 13-ம் தேதி நீதிமன்றத்திற்கு பிரபு அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது மனைவி பிரபாவை செல்போனில் தொடர்பு கொண்ட பிரபு, வழக்கமாக தான் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள் கிடைக்காமல் சிறையில் அவதியுற்று வருவதாகக் கூறியுள்ளார்.