ஆனால், அதன் பிறகு அப்படத்தைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.
கடந்த சில நாட்களாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது, இப்படத்தின் இயக்குநரை மாற்றவிருக்கிறார்கள் என்ற தகவல்கள் இணையத்தில் பரவி வந்தன.

ஆனால், அந்தத் தகவல்கள் உண்மையல்ல என்பதை தனுஷின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் நடிக்கும் இளையராஜா பயோபிக் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப்போவதில்லை எனப் பரவும் தகவல் உண்மையற்றது எனவும், லோகேஷ் கனகராஜின் ‘டிசி’ படத்தை முடித்த பிறகு திட்டமிட்டபடி இப்படத்திற்கான வேலைகளை அவர் தொடங்குவார் எனவும் அறிவித்திருக்கிறார்.
படத்தின் அடுத்தக் கட்ட அப்டேட்கள் கூடிய விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்திருக்கிறார்.