‘இழுபறியில் தொடரும் திமுக – காங்கிரஸ் கூட்டணி!’ – பரபரப்பில் அறிவாலயம் |DMK–Congress Seat Sharing Talks Stalled Again; High Drama at Anna Arivalayam

Spread the love

காங்கிரஸிடம் 19 தொகுதிகள் என பேச்சுவார்த்தையை தொடங்கியதால்தான் சோடங்கர் குழு கடும் அப்செட் என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, ‘காயிதே மில்லத் பெயரில் பல்கலைகழகம் அமைக்கக் கோரிக்கை வைத்து முதல்வரை சந்தித்தேன்’ என விசித்திரமாக கம்பு சுற்றினார் வைகோ. மதிமுகவின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மதிமுகவின் குழுவினர் திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தனர்.

அப்போது மதிமுக இந்த முறை தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டுமென்றும் ஒரு ராஜ்ய சபா சீட் வேண்டுமென்றும் கேட்டிருந்தனர். ஆனால், திமுக கடந்த முறையை போன்றே அல்லது அதற்கும் குறைவாகவே டீலை முடிக்க பார்க்கிறது. இதனால்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பு முதல்வரை அறிவாலயத்திலேயே சந்தித்து தங்களின் எதிர்பார்ப்பை அவரின் காதில் போட்டு வைத்திருக்கிறார் வைகோ. அதனால்தான் சீட் பங்கீடு பற்றி எதுவும் பேசினீர்களா என்கிற கேள்விக்கு, ‘அவைத்தலைவர் என்ன சொன்னாரோ அதுதான் எங்களின் நிலைப்பாடு’ என ஒரே வரியில் முடித்துவிட்டு வண்டியை கிளப்பினார்.

புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *