இது தொடர்பாக, அவர் பேசியதாவது:
“நாங்கள் இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்கின்றோம். துருக்கியின் கப்பல்கள் இஸ்ரேலின் துறைமுகங்களுக்குச் செல்ல நாங்கள் அனுமதிக்கமாட்டோம். மேலும், அவர்களது விமானங்கள் எங்கள் வான்வழிப் பாதையினுள் நுழையவும் அனுமதி வழங்கப்படாது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே, இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்தினுள் வருவதற்கு, கடந்த வாரம் தடை விதிக்கப்பட்டதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, நீண்டகால நட்பு நாடுகளான துருக்கி மற்றும் இஸ்ரேலின் உறவுகள் காஸா மீதான போர் தொடங்கியது முதல் மோசமாடைந்து வந்தன.
மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டு மட்டும் இருநாடுகளுக்கு இடையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!