வங்கதேசத்தில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்ளிட்ட வங்கதேசத்தின் முக்கிய நகரங்களில் நேற்று (ஏப்.7) ஏராளமான மக்கள் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தினர்.
இந்தப் போராட்டங்களானது சில மணிநேரங்களில் வன்முறைக்களமாக மாறி டாக்கா, ஷைலட், சட்டோக்ராம், குல்னா, பரிஷால், கும்மில்லா ஆகிய நகரங்களிலுள்ள பாட்டா, கே.எஃப்,சி. மற்றும் டாமினோஸ் பிட்சா ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் கடைகளை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினார்கள்.