இதனால், மனமுடைந்த அவரது தாய் சிவகாமி, வீட்டில் திங்கள்கிழமை கிருமி நாசினி பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தற்போது அவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளாா்.
இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்த கிஷோரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டது. இதையடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.