உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஈபிள் டவரில் கூடியிருந்த 1,200-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி தீயை அணைத்தனர்.
தொடர்ந்து, பாதுகாப்பு கருதி ஈபிள் டவருக்குள் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு மத்தியில் ஈபிள் டவரில் தீ விபத்து ஏற்பட்டு, தடை விதிக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பாரீஸ் சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.