கடந்த ஆண்டு ஜூன் மாதம், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது 12 நாள் போரை அமெரிக்கா தொடங்கியபோது, உச்சத் தலைவர் தலைமறைவாக இருந்தபோது, அவருக்குப் பின் விரைவாக நியமிக்கப்படக்கூடிய மூன்று வேட்பாளர்களை அவர் பெயர் குறிப்பிட்டிருந்தார்.
1. ஈரானின் நீதித்துறைத் தலைவர் கோலம் – ஹொசைன் மொஹ்சேனி-எஜேய்.
2. கமேனியின் தலைமை அதிகாரி அலி அஸ்கர் ஹெஜாசி.
3. ஈரான் புரட்சியைத் தொடங்கிய ரூஹொல்லா கமேனியின் பேரன் ஹசன் கமேனி. இவர் சீர்திருத்தவாதக் கருத்துடையவராகப் பார்க்கப்படுகிறார்.
ஈரானின் அடுத்த தலைவரை 88 மத குருக்களைக் கொண்ட “நிபுணர்கள் குழு’தான் தேர்ந்தெடுக்கும். அந்தப் பட்டியலில் அயதுல்லா அலி கமேனியின் மகன் உட்பட சில வேட்பாளர்கள் இந்தப் பதவிக்கான சாத்தியமான போட்டியாளர்களாகக் கருதப்படுகின்றனர்.
அலிரேசா அராபி (67): கமேனிக்கு நெருக்கமானவர், நிபுணர்கள் குழுவின் துணைத் தலைவர். மத ரீதியாகப் பலம் வாய்ந்தவர் என்றாலும், ராணுவத்துடன் இவருக்கு நெருக்கம் குறைவு.