ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல்: '$200 தொடுமா கச்சா எண்ணெய்?' – இஸ்ரேல் மீது அமெரிக்கா கோபம்

Spread the love

கடந்த 28-ம் தேதியில் இருந்து ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆனால், அந்த கூட்டணியில் தற்போது விரிசல் எழுந்துள்ளது.

என்ன காரணம்?

கடந்த சனிக்கிழமை (மார்ச் 7), ஈரானின் 30 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் குறித்து முன்னரே இஸ்ரேல் அமெரிக்காவிற்குத் தெரிவித்திருந்ததுதான். ஆனால், இஸ்ரேல் சொன்ன அளவைத் தாண்டி ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ஈரானின் ராணுவத் தளவாடங்களுடன் இந்த எண்ணெய் கிடங்குகளுக்கு லிங்க் இருந்ததால், தாங்கள் அதன் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால், அமெரிக்காவோ ஈரான் குடிமக்களையும் உலக அளவிலான எண்ணெய் விலையையும் பாதிக்கும் இந்தத் தாக்குதலைக் கொஞ்சமும் விரும்பவில்லை.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவருக்கு எண்ணெய் கட்டமைப்புகள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கக்கூடாது.

ஈரான் பதில்

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கதம் அல்-அன்பியா கூறியுள்ளதாவது…

“ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் தொடர்ந்தால், தங்களது பிராந்தியத்தில் இருக்கும் பிற நாடுகளின் எண்ணெய் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

ஈரான் இன்னும் பிற நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறி வைக்கவில்லை.

இனி ஈரான் கட்டமைப்புகள் மேல் தாக்குதல் நடந்தால், உடனே நாங்களும் தாக்குதல் நடத்துவோம்.

இது எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலர்கள் வரை உயர்த்தலாம்”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *