ஈரான் போர் தாக்கம்: LPG உற்பத்தி அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு|Iran War Shock: India Moves to Secure LPG Supply

Spread the love

ஈரான் போரினால் உலகம் முழுவதும் எரிசக்திகளில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், எரிசக்திகளை இறக்குமதி செய்யும் இந்தியாவின் நிலைமையைக் கேட்கவே வேண்டாம்.

இனி வரும் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் படி, நேற்று மத்திய பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது…

“தற்போது உலக அளவில் உள்ள பாதிப்புகள் காரணமாக எரிபொருள் சப்ளை மற்றும் எல்.பி.ஜி விநியோகத்திற்குப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

சிலிண்டர்

சிலிண்டர்

அதனால், மத்திய அமைச்சகம் எண்ணெய் நிறுவனங்களை எல்.பி.ஜி உற்பத்தியை அதிகரிக்கவும், அதை வீட்டு உபயோகச் சிலிண்டர்களுக்குப் பயன்படுத்துமாறும் ஆணையிட்டுள்ளது.

பிளாக் மார்க்கெட் மற்றும் பதுக்கி வைப்பதைத் தவிர்க்க, 25 நாள்களுக்கு முன் புக் செய்த வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு அமைச்சகம் முன்னுரிமை கொடுக்கிறது.

இறக்குமதி செய்யப்பட்ட எல்.பி.ஜி சிலிண்டர்களை வீட்டு உபயோகம் அல்லாத பயன்பாடுகளில் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு வழங்க முன்னுரிமை கொடுக்கிறது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *