ஈரான் போர் மத்திய கிழக்குக்கு பரவல்: புர்ஜ் கலீஃபா வெளியேற்றம்|Burj Khalifa Cleared as Iran War Widens

Spread the love

ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் துபாய், கத்தாரின் தோஹா மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத்திலும் நீள்கிறது.

ஈரானின் பதிலடி தாக்குதல் இந்தப் பகுதிகளுக்கும் நீண்டுள்ளது.

துபாய் தனது விமானப் போக்குவரத்தை ஏற்கெனவே நிறுத்தியிருந்தது.

இந்த நிலையில், இப்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 828 மீட்டர் புர்ஜ் கலீஃபாவில் அனைவரும் வெளியேற்றப் பட்டிருக்கின்றனர்.

இது முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முதலில் சொல்லப்பட்டது..

ஈரான் மீதான தாக்குதல்

ஈரான் மீதான தாக்குதல்

காரணம், இங்கே தாக்குதல் ஏற்பட்டால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும். அதனால், முன்னரே அங்கே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை புர்ஜ் காலிஃபாவின் அருகில் தாக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கு புர்ஜ் காலிஃபா தான் இலக்கா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் அக்கட்டடத்தின் அருகில் இருந்து கரும்புகை வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் இஸ்ரேல் இடையேயான தாக்குதல் மத்திய கிழக்கின் பிற நாடுகளுக்கும் பரவுவதால் இந்தப் போர் இன்னும் பெரிதாகலாம் என அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல், அமெரிக்கா முதல் கட்டப் போரை 4 நாள்கள் வரை தொடரலாம் என்று கூறப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *