ஈரான் போர் தொடங்கியதும், “போச்சு போ… தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய் தாறுமாறாக எகிறப்போகுது’ என்று அனைவரும் நினைத்தோம்.
ஆனால், அந்த நினைப்பிற்கு மாறாக தங்கம், வெள்ளி விலையில் பெரிய ஏற்றம் நடக்கவில்லை. மாறாக, கச்சா எண்ணெய் தான் தாறுமாறாக எகிறியது. ஆனால், அதுவும் இப்போது கட்டுக்குள் வந்துவிட்டது.
தங்கம், வெள்ளி விலை தற்போது நிலையாக இருப்பதற்குக் காரணம், ‘அமெரிக்க டாலரின் மதிப்பு வலுவாவது’ ஆகும்.
ஆனால், ஈரான் போர் முடிந்ததும் வெள்ளிக்கான தேவை அதிகரிக்கும். அதனால், அதன் விலை நல்ல உயர்வைக் காணும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

“போர் முடிந்ததுமே உலோகங்களின் விலையில் ‘பவுன்ஸ்பேக்’ நடக்கலாம். ஏனெனில், போருக்குப் பின், புனரமைப்பு, மறுகட்டமைப்பு போன்றவை நடக்கும்.
வியட்நாம் தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை அனைத்துப் போரிலுமே உள்கட்டமைப்பை புனரமைப்பது செய்வதை பார்த்திருக்கிறோம்.
இந்தப் போருக்குப் பின்னும் பார்ப்போம்.