ஈரோடு: கொத்தடிமைகளாக இருந்த மத்தியப் பிரதேச சிறுவர், சிறுமியர்; மாவட்ட நிர்வாகம் மீட்ட பின்னணி என்ன? | Erode district administration rescuing Madhya Pradesh boys and girls who were in bondage?

Spread the love

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் உள்ள ஓலப்பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சில தனியார் கரும்பு தோட்டங்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்துள்ளன.

இதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த யுவராஜ் சிண்டோ என்ற நபர் 5 சிறுவர்கள், 4 சிறுமிகள் என மொத்தம் 24 நபர்களை அந்த மாநிலத்தில் இருந்து அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணிகளில் கொத்தடிமைகளாக ஈடுபடுத்தி வந்ததைக் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.

அந்த நபரைக் கைது செய்ததுடன் சிறுமியர் உட்பட நபர்களையும் மீட்டு வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *