கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் விதமாக உடல்நிலையைக் காரணம் காட்டி ரவியை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
“சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்ட ரவியை, காவல்துறை கைதுசெய்யாமல் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாக” பட்டியல் சமுதாய மக்களுக்கான ஆதரவு இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகநீதி மக்கள் கட்சியினர், “பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மண்டபம் வாடகைக்குத் தர முடியாது என பட்டவர்த்தனமாகச் சொல்கிறார்கள். இதனை தட்டிக்கேட்க வேண்டிய பெருந்துறை காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாகம் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. சாதிய ஆணவத்துடன் நடந்து கொண்ட ரவி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.