இதனைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கு ஸெலென்ஸ்கி மன்னிப்புக் கடிதம் அனுப்பியதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமெரிக்கா உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் வழங்கும் என்று தெரிவித்துள்ளது.
நேற்று நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை 8 மணி நேரம் நீடித்தது. இதில், அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட 30 நாள் போர்நிறுத்தத் திட்டத்தை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.