‘உங்கள் அண்ணன் உணர்வெழுச்சியுடன் காத்திருக்கிறேன்!’ – நாதக மாநாட்டு குறித்து சீமான் உருக்கம்! | Seeman Lend a Emotional Invite to his Cadres for Statewide Conference

Spread the love

பிப்ரவரி 21-ம் தேதியான இன்று திருச்சியில் மாபெரும் மக்கள் மாநாட்டை நடந்துகிறது நாம் தமிழர் கட்சி. கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் உருக்கமான மடலை வெளியிட்டுள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

சீமான்

சீமான்
டிவிட்டர்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி ஆலம்பட்டிபுதூரில் நம்முடைய நாம் தமிழர் கட்சி பேரெழுச்சியாக நடத்தவிருக்கும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சூழ பெருந்திரளாக வருகை தரவிருக்கும் என்னுயிர்ச் சொந்தங்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க பேராவலுடன் காத்திருக்கிறேன். வரும்வழியில் ஆரவாரம் ஏதுமின்றி, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாதவாறு அமைதியான முறையில் உங்கள் பயணம் கட்டுகோப்பான இனிய பயணமாக அமைய வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *