இவ்வளவு செல்வாக்கு படைத்த நீங்கள் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறீர்கள். டெல்லியில் எனக்குப் பெரிய வீடு இருக்கிறது.
என் வீட்டுக்கு வாருங்கள்’ என்று கலைஞர் கருணாநிதியை பிரதமர் மோடி அழைத்தார். ஆனால் ‘எனக்கு 2 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள்.
அதனால் உங்கள் வீடு பத்தாது’ என கலைஞர் சிரித்துக்கொண்டே கூறிவிட்டார். அதனை கேட்டு நான் அசந்துவிட்டேன்” என நினைவுக்கூர்ந்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய ஜெகத்ரட்சகன், ” சமீபத்தில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு முதலமைச்சர் என்னைப் பார்த்து, ‘உங்கள் முதலமைச்சர் மிகப்பெரிய சாதனைகளைச் செய்கிறார்.
அவர் செய்கின்ற சாதனைகளை எல்லாம் பார்த்து நான் வியந்து போயிருக்கிறேன்’ என அவர் சொன்னார்” என ஸ்டாலின் குறித்தும் புகழ்ந்திருக்கிறார்.