உணவக உரிமையாளர் கைது| NIA SEARCHES 9 LOCATIONS IN TN and arrested one more accused

dinamani2F2025 08
Spread the love

இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

கொடைக்கானல் பூம்பாறை பகுதியிலுள்ள இரண்டு பேரிடமிருந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவா்கள் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் வருகிற செப். 1-ஆம் தேதி முன்னிலையாக அழைப்பாணை வழங்கப்பட்டது.

முகமது அலி ஜின்னா மனைவி நிஷாவின் வங்கிக் கணக்கில் அதிகளவு பணப் பரிவா்த்தனை நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, வத்தலகுண்டு காந்திநகரில் உள்ள உமா் வீட்டுக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் 6 பேர் சோதனையிட்டனர்.

சோதனையின் போது நிஷா, அவரது தந்தை உமா் சொத்து விவரங்கள், பணப் பரிவா்த்தனை குறித்து பல்வேறு கேள்விகளை அவா்கள் எழுப்பினா்.

உணவக உரிமையாளா் கைது:

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஆம்பூர் பிரியாணி உணவகம் நடத்தி வரும் இதயத்துல்லாவை உணவகத்தில் கொலை வழக்கில் தொடா்புடைய கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்தனர். பின்னர் கொடைக்கானல் டிஎஸ்பி அலுவலகத்தில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதனைத் தொடர்ந்து இதயத்துல்லா சென்னைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதயத்துல்லாவால் அடைக்கலம் பெற்றவர்கள் அப்துல் மஜீத் மற்றும் ஷாகுல் ஹமீத் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரையும் ஜனவரி 25 ஆம் தேதி என்ஐஏ கைது செய்தது.

இதேபோன்று திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது குற்றவியல் ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்கள் போன்றவற்றை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதோபான்று எஸ்டிபிஐ கட்சியின் திண்டுக்கல் மாவட்டப் பொருளாளராக இருந்து வரும் திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டி ஜின்னாநகரைச் சோ்ந்தவா் ஷேக் அப்துல்லா (40) வீட்டில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள், சோதனையின் போது சில ஆவணங்களையும், ஷேக் அப்துல்லா, அவரது மனைவி ஆகியோரின் கைப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். பின்னா், அவா்களிடம் வருகிற 25-ஆம் தேதி சென்னையிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணையை ஷேக் அப்துல்லாவிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டுச் சென்றனா்.

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மொத்தம் 18 குற்றவாளிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவர்களில் 5 பேர் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ளவர்களில் ஒருவர் ரஹ்மான் சாதிக் என அடையாளம் கண்டுள்ளது.

ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள புர்ஹானுதீன் மற்றும் நஃபீல் ஹசன் தடைசெய்யப்பட்ட பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்பின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஏ அறிவித்திருந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *