ஒவ்வொரு செய்தி சேனலிலும் நாங்கள் ஊழல்வாதிகள் என்று அழைக்கப்பட்டோம். இன்று நான் நேர்மையானவன் என்பதை நீதிமன்றம் நிரூபித்திருக்கிறது. உண்மை வென்றது!” என உடைந்து அழுது பேசியிருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும், பாஜகவை விமர்சித்தும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியிருக்கிறார்.
“உண்மையும், நீதியும் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு துணையாக நின்றிருக்கிறது.
பாஜகவிற்கு இது தார்மீக மரணதண்டனை ஆகும். பாஜக ஆதரவாளர்கள் ஆழ்ந்த அவமானத்தில் துடிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பு நாட்டின் எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களைச் சுட்டிக்காட்டி கொடுப்பதைத் தொழிலாகக்கொண்டு இருந்தவர்கள் தான் இந்த பாஜக சிந்தாத்ந்தவாதிகள்” என்று விமர்சித்திருக்கிறார்.