உதயநிதியின் கிரீன் சிக்னல்; உற்சாகத்தில் உடுமலை இளைஞரணி | DMK udumalaipettai plan for 2026 assembly election

Spread the love

உடுமலைப்பேட்டையில் உட்கட்சி பிரச்னை தலைவிரித்து ஆடுவதால், அதிமுக-வை எதிர்த்து வெற்றி பெற வேண்டுமென்றால் பொதுவான வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதுதான் பென் டீம் மற்றும் உளவுத்துறை ரிப்போட்டாக உள்ளது. அதன்படி பார்த்தால், கட்சிக்காரர்கள் மத்தியில் எந்த அதிருப்தியும் இல்லாதவரும், உதயநிதிக்கு மிகவும் நெருக்கமான வட்டத்தில் உள்ள தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமாரைத்தான் தலைமை டிக் அடிக்க அதிகம் வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.

ஏனென்றால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது, உடுமலைப்பேட்டை நகராட்சித் தலைவர் தேர்தலில் ஜெயக்குமாரைத்தான் உதயநிதி அறிவித்தார். ஆனால், சில உட்கட்சிப் பிரச்னையால், ஜெயக்குமார் தோற்கடிக்கப்பட்டார். தனது அணியில் இருக்கும் ஜெயக்குமாருக்கு ஏதாவது ஒரு வாய்ப்பு வழங்க வேண்டுமென உதயநிதி விரும்புகிறார். அதன் பின்னணியில்தான் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.யுமான ஈஸ்வரசாமி அழைப்பை ஏற்று உடுமலைப்பேட்டைக்கு வந்த உதயநிதி, தனது ஆதரவாளர் என்பதைக் காட்டுவதற்காகவும், ஜெயக்குமாரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்ட நூலகத்தை திறந்து வைத்துள்ளார்.

அத்துடன் வரும் தேர்தலில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கணியூரில் நடைபெற்ற இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில், இதை உறுதிப்படுத்தும் வகையில் இளைஞரணிக்கு வரும் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என சூசகமாக உதயநிதி பேசினார். எதுவாக இருந்தாலும் நாமும் முயற்சித்து பார்ப்போம் என மறுபுறம் உடுமலைப்பேட்டை நகரச் செயலாளர் வேலுசாமி ஆ.ராசா, எ.வ.வேலு மூலமும், ஷியாம் பிரசாத் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதன் மூலமும், அடிவள்ளி முரளி அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அன்பகம் கலை மூலமும் சீட் பெற தீவிரமாக முயன்று வருகின்றனர்” என்கின்றர் விரிவாக.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *