உத்தரகண்ட் இயற்கை பேரிடர்: 10 ஆண்டுகளில் 3,500 பேர் பலி Uttarakhand

Spread the love

உத்தரகண்டில் அடிக்கடி நிகழும் இயற்கை பேரிடர்களில் சிக்கி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 3,500 பேர் பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தரகண்டில் நிகழும் காலநிலை மாற்றம், பெருவெள்ளம், நிலச்சரிவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 705 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றன.

மலைப்பிரதேசமான உத்தரகண்டில் இயற்கை பேரிடரால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்த இயற்கை பேரிடரில் மாநிலத்திற்கான பொருளாதார இழப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகவே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

உத்தரகண்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 705 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதேகாலகட்டத்தில், ஒட்டுமொத்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 3500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *