உத்தரப்பிரதேசம்: கொலையில் முடிந்த வாக்குவாதம்; வியாபாரியின் தலையை வெட்டி எடுத்த நபர் கைது | Uttar Pradesh: Argument ends in murder; Man arrested for beheading businessman

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகில் உள்ள பார்சவால் என்ற கிராமத்திற்கு பப்லு என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய சென்றார். அங்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று சங்கர்(50) என்பவர் தெரிவித்தார்.

ஆனால் பப்லு அங்கிருந்து செல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனால் பப்லுவிற்கும் சங்கர் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் பப்லுவை கத்தியால் தாக்கி அவரது கழுத்தை சங்கர் அறுத்தார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவத்தில் பப்லுவின் கழுத்தை அறுத்து எடுத்ததோடு அந்தக் கழுத்தைத் தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார். அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பயத்தில் இச்சண்டையில் தலையிடாமல் ஒதுங்கி நின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அக்கிராமத்தில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பப்லுவின் வீட்டிற்கு போலீஸார் சென்றபோது அங்கு பப்லு எந்தக் கவலையும் இல்லாமல் சமையல் செய்து கொண்டிருந்தார். அவரது அருகில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இருந்தது.

அவற்றை போலீஸார் பறிமுதல் செய்து பப்லுவைக் கைது செய்தனர். பப்லுவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பப்லுவிற்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. கணவன் கொலை செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டு அவரது மனைவி கதறி அழுதார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *