58 பெண்களின் ஆபாச படங்கள்
அவரை நேரடியாகச் சென்று கைது செய்தால் பிரச்னை ஏற்படும் என்று கருதிய போலீஸார் அவரது வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டு திருடன், திருடன் என்று கூறி கூச்சலிட்டனர். அந்நேரம் ஏற்பட்ட பரபரப்பில் போலீஸார் ஜோதிடர் வீட்டிற்குள் நுழைந்து படுக்கை அறையில் இருந்த அசோக்கைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆய்வு செய்தபோது 58 பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரிய வந்தது.
அவர் தனது அலுவலகத்தில் ஓகஸ் பிராபர்டி டீலர் என்று பெயர் வைத்திருந்தார். ஆனால் ஒருபோதும் அத்தொழில் செய்தது கிடையாது என்று போலீஸார் தெரிவித்தனர். அதோடு சமுதாயத்தில் தன்னை மிகவும் அந்தஸ்துள்ள ஜோதிடராகக் காட்டிக்கொண்ட அசோக் அரசியல்வாதிகளுடன் நெறுங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
நாசிக் அருகில் உள்ள மிர்கான் பகுதியில், அவருக்குச் சொந்தமான ஈசான்யேஸ்வர் கோயிலும், ஒரு ஆடம்பரமான ஓய்வு இல்லமும் அமைந்துள்ளன. அங்கு பல முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்க நபர்களும் அடிக்கடி வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
போலீஸார் அவரது பண்ணை வீட்டில் ரெய்டு நடத்தியதில் துப்பாக்கி மற்றும் தோட்டா பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர அவருக்குச் சொந்தமான கோயிலிலும் ரெய்டு நடத்தி முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா முழுவதும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மாநில அரசு ஐ.பி.எஸ். அதிகாரி தேஜஸ்வினி தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து இருக்கிறது.