உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!

Dinamani2f2025 01 242f72au3pmd2fromania.png
Spread the love

ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன.

ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்துள்ளார். தனியாக வசித்து வந்த அவரை கடந்த சில நாள்களாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களது அழைப்புகளுக்கு அட்ரியானா பதிலளிக்காததினால், வருத்தமடைந்த குடும்பத்தினர் தலைநகர் புக்கரெஸ்டிலுள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளனர். அப்போது, அவரது வீடு உள்புறமாக பூட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ருமேனிய காவல் துறை மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, அட்ரியானா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதையும் படிக்க: 3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *