இந்தத் திருவிழா குறித்து தெரிவித்த கோயில் நிர்வாகத்தினர், “தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் கர்ப்ப கிரக உற்சவ மூர்த்திக்கு பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சி இங்கு மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பால், இளநீர், திருமஞ்சனம், கலந்த புனித நீரை ஊற்றி பெண்கள் வழிபட்டனர்.

நோய் நொடிகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் செல்லியாண்டி அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பக்தர்கள் உடல்களில் சேறு பூசும் நேற்றிக்கடன் நிகழ்வும் நடைபெறுகின்றன.
அம்மன் திருவீதி உலா நடைபெற்ற வழிநெடுகிலும் மிளகு கலந்த உப்பை பெண்கள் பலரும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்” என்றனர்.