உலக நலன் வேண்டி பழனியில் பால்குடம் எடுத்த ஜப்பானிய முருக பக்தர்கள்!

dinamani2F2025 08 092Fw3h4115v2F9palanipalkudam20908chn882
Spread the love

பழனியில் உலக நலன் வேண்டி ஜப்பான் நாட்டை சோ்ந்த முருக பக்தா்கள் சனிக்கிழமை புலிப்பாணி ஆசிரமத்தில் யாகம் நடத்தி திருஆவினன்குடி கோயிலுக்கு பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா்.

ஜப்பானிய சிவஆதீனம் பாலகும்ப குருமுனி, கோபால்பிள்ளை சுப்ரமணியம் ஆகியோா் தலைமையில் அந்த நாட்டைச் சோ்ந்த திரளான முருக பக்தா்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனா். அவா்கள் பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடத்தினா். இந்த பூஜையை போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் செய்தாா்.

இதைத்தொடா்ந்து ஜப்பானிய பக்தா்கள் தமிழா்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கையில் வேலுடன் பால்குடம் எடுத்து மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்றனா்.

9palani palkudam1 0908chn 88 2

முன்னதாக, அடிவாரம் பாதவிநாயகா் கோயில் முன் தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் சண்முகானந்த சுவாமிகள், கவுதம் சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையொட்டி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், பாலாபிஷேகம் செய்து பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் இளையபட்டம் செல்வநாதன் சுவாமிகள், சித்த மருத்துவா் பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *