“தமிழக காவல்துறை என்ன செய்கிறது?” என்கிற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. “பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் இருப்பதாக” சமூக வளைதளங்களிலும் பேசுபொருளானது. இதை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக உள்துறை செயலாளர்,பொறுப்பு டி.ஜி.பி, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி ஆகியோர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அந்த சந்திப்பில், “தமிழகத்தில் கடந்த காலங்களை விட சாரசரியான குற்ற எண்ணிக்கையின் அளவு குறைந்துள்ளது. சட்டம் ஒழுங்கு முழுமையாக காவல்துறை கட்டுபாட்டில் இருக்கிறது” என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்கள். மற்றொருபுறம், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை” என்கிற குற்றச்சாட்டை முன் வைத்து எதிர்க்கட்சியாக உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியினர் அடுத்த வாரம் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்று ஆர்பாட்டம், போராட்டம் என அரசுக்கு எதிராக நடக்கும் விசயங்கள் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் குற்றச்செயல்களுக்கு உளவுத்துறையின் செயல்பாடுகளில் ஏற்பட்ட தொய்வும் காரணம் என அரசு நினைக்கி்றது.