உ.பி.யில் டபுள் டெக்கர் பேருந்து – கார் மோதி விபத்து: 7 பேர் பலி

Dinamani2f2024 082f0603d27e 5d43 47f5 83b0 A0ee75c723362fup1.jpg
Spread the love

உத்தரப் பிரதேசத்தில் ஈரடுக்கு பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் வர்மா கூறுகையில்,”ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் ரேபரேலியில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற ஈரடுக்கு பேருந்து கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

லக்னெள நோக்கிச் சென்ற கார் மீது ஈரடுக்கு பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 20-25 பேர் காயமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *