புது தில்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரயாக்ராஜ், வாரணாசி, அயோத்தி, கான்பூா், லக்னௌ மற்றும் மிா்ஸாபூா் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவுக்கு செல்லும் பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரயாக்ராஜுக்கு ஒரு நாளைக்கு 500 ரயில்கள் வருவதால் பக்தா்களின் கூட்டத்தை கண்காணிக்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவதாக கூடுதல் ரயில்வே இயக்குநா் பிரகாஷ் டி தெரிவித்தாா்.
பிரயாக்ராஜ் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டு அங்கும் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.