நீடாமங்கலம்: தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள் விழா, வலங்கைமான் அருகே உத்தமதானபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் 171 ஆவது பிறந்த நாள் விழா பல்வேறு தமிழ் அமைப்புகளால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம், உத்தமதானபுரத்தில் உள்ள உ.வே.சா. நினைவு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது சிலைக்கு, மாவட்ட ஆட்சியா் வே. வ.மோகனசந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அவருடன் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உ.வே.சாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.