ஊட்டி: பழங்குடியைக் கொன்று தின்ற புலி, ஆவேசத்தில் வனத்துறைக்கு எதிராக சாலையில் இறங்கிய மக்கள்! – ooty tiger attack update .

Spread the love

நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள சின்ன காடிமந்து பகுதியைச் சேர்ந்தவர் தோடர் பழங்குடி புஸ்தாள் குட்டன். 55 வயதான இவர் மலை காய்கறி தோட்டங்களில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல் நேற்று மாலை தோட்ட வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிய புஸ்தாள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

புலி தாக்குதல் சம்பவம்

புலி தாக்குதல் சம்பவம்

பதற்றமடைந்த அவரின் குடும்பத்தினர் பல இடங்களிலும் புஸ்தாள் குட்டனை தேடி அலைந்திருக்கிறார்கள். அருகில் உள்ள வனப்பகுதியில் புஸ்தாள் குட்டனின் உடல் சிதைந்து கோரமான நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, புஸ்தாள் குட்டனின் உடல் பாகங்களை புலி தின்று சென்றிருப்பதையும் உள்ளூர் பழங்குடி மக்கள் உறுதி செய்து அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *