ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியத்தை பெற்றுத்தர அன்புமணி வலியுறுத்தல் | Anbumani urge payment of Rs 1251 crore in arrears to rural employment scheme workers

Spread the love

சென்னை: ‘ஊரக வேலை​வாய்ப்பு திட்​ட பணி​யாளர்​களுக்கு ரூ.1251.39 கோடி நிலுவை ஊதி​யத்தை அரசு பெற்​றுத் தரவேண்​டும்’ என பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்கை​: தமிழகத்​தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறு​தித் திட்​டத்​தின்​படி முடிக்​கப்​பட்ட பணி​களுக்கு இன்​று​வரை ரூ.1251.39 கோடி ஊதி​யம் வழங்​கப்​ப​டா​மல் நிலு​வை​யில் உள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ் நடப்​பாண்​டில் தமிழகத்​துக்கு 12 கோடி மனித வேலை நாட்​கள் மட்​டுமே ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டிருக்​கிறது. இது கடந்த காலங்​களில் ஒதுக்​கப்​பட்​டதை விட மிக​வும் குறைவு.

ஆட்​சிக்கு வந்​தால் மத்​திய அரசை வலி​யுறுத்தி தமிழக மக்​களுக்கு 150 நாட்​கள் வேலை பெற்று தரு​வோம் என்று வாக்​குறுதி அளித்த திமுக, மனித வேலை​நாட்​கள் குறைக்​கப்​பட்​டிருப்​ப​தற்கு எந்த எதிர்ப்​பும் தெரிவிக்​க​வில்​லை.

திமுக ஆட்​சி​யில் செய்​யப்​பட்ட பணி​களுக்​கான ஊதி​யத்​தைப் பெற்​றுத்தர வேண்​டியது திமுக அரசின் கடமை. அந்​தக் கடமையை நிறைவேற்​றும் வகை​யில் ஊரக வேலை உறு​தித்​திட்ட பணி​யாளர்​களுக்கு வழங்​கப்பட வேண்​டிய ஊதிய நிலு​வையை மத்​திய அரசிட​மிருந்து திமுக அரசு பெற்​றுத் தரவேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *